வாழ்வில் இல்லாமை இருள் விலகி இன்ப ஒளி நிறைய வேண்டும்.தீபாவளி வாழ்த்து: ஜி.கே.மணி எம்எல்ஏ
இன்பம் பெருகி,மகிழ்ச்சி பொங்கி. குடும்பம் நலமுடன் வாழஉங்களுக்கும்.குடும்பத்தினரு க்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.என பாட்டாளி மக்கள் கட்சியின் கெளரவ தலைவர்,சட்டமன்றக்குழு தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ, தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
இந்தத் தீபாவளி திருநாள் முதல் தீமைகள் நீங்கி,நன்மைகள் பெருகி, மனச்சோர்வு அகன்று, மகிழ்ச்சி பொங்க,உடல் ஆரோக்கியம் உற்சாகம் நிலைக்க,தீப ஒளிபோல் ஒளிமயமான வாழ்வு மலர தித்திக்கும் தீபாவளியாய் செழிக்கட்டும்.
உங்கள் குடும்பத்தின் வாரிசுகள். அடுத்த தலைமுறை உங்கள் வழியில் முன்னேற வேண்டும்.கணவன்,மனைவி. மகன், மகள், உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடத்தும் அன்பு,பாசம், ஒற்றுமை ஓங்கி பெற்றோர்கள், பெரியோர்கள் நல்வாழ்த்துக்களுடன் நல்ல குடும்பம் பல்கலைக் கழகம் என நல்வாழ்வு சிறக்கட்டும்.
அன்பெனும் அருங்குணம் பெருக்கெடுத்து,அறநெறி வாழ்வியல் பண்பாடு செழித்து. மனிதநேயம்.சகோதர நல்லிணக்கம் வளர்ந்து, கருணை, சேவை,நாட்டுப்பற்று நிலைத்து, நன்மைகள் பெருகி,அமைதியும் வளர்ச்சியும் ஓங்கட்டும்.
தரமான கல்வி கிடைக்கப்பெற்று, வேலைவாய்ப்பு பெருகி,விவசாயம் செழித்து,தொழில் வளர்ந்து, பொருளாதாரம் உயர்ந்து, சமூகநீதி,அமைதி,வளம், வளர்ச்சி, ஒற்றுமை,சகோதரத்துவம்.பன்முகத் தன்மை உள்ளிட்டவை பெருகவும். வாழ்வில் இல்லாமை இருள் விலகி இன்ப ஒளி நிறைய வேண்டும்.
உங்கள் உழைப்பும்.முயற்சியும் வெற்றிபெற்று,எண்ணங்களும்.கனவுகளும் நிறைவேறி,நீங்களும் உங்கள் குடும்பமும் மகிழ்ச்சியுடன். மன நிறைவுடன், ஆரோக்கியத்துடன். எல்லா வளமும் நலன்களும் பெற்று நீடூழி வாழ உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

