தீபாவளி பண்டிகையையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் ஆ.மணி தலைமையிலும் தமிழ்நாடு மாற்று திறனாளிகள் முன்னேற்ற சங்கம் மாநில தலைவர் ர.தங்கம்,மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் எஸ்.முத்துலட்சுமி,

மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.பச்சையப்பன், சங்கத்தின் மாவட்ட பொருளாளர், கே.கிருஷ்ணன், சங்கத்தின் மாவட்டத் துணைச் அமைப்பாளர் . டி.திருஞானம்,கழக பிரதிநிதி தங்கராஜ் ஆகியோர் ஏற்பாட்டில் ஆதனூரில் மாற்றுத்திறனாளிகள் அணி மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் இணைந்து தீபாவளி பண்டிகையையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் 100 க்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்தினார்கள்.

