மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் 200 மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி நலத்திட்ட உதவி
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் தருமபுரி திமுக மாவட்ட அலுவலகத்தில்மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் கே. பச்சியப்பன் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான வழக்கறிஞர் ஆ. மணி, முன்னாள் மாவட்ட செயலாளர் தடங்கம் பெ. சுப்பிரமணி, நகர செயலாளர் நாட்டான்மாது சங்கத்தின் மாநில தலைவர் ர.தங்கம் ,

மாவட்ட செயலாளர் முத்துலட்சுமி சேகர், மாவட்ட பொருளாளர் கே. கிருஷ்ணன், தருமபுரி ஒன்றிய செயலாளர் டி. திருஞானம், நிர்வாகிகள் குமுதா எம். மாதம்மாள், கே. தேவன், திம்மன், மாதேஷ்,கரூரான், முனியம்மாள், துரைசாமி, பெரியண்ணன், ஆறுமுகம், மஞ்சுளா, பசுவன், அண்ணாமலை, இமான்,லட்சுமி, கணேசன், பார்வதி, சரவணன் கே. சண்முகம் எம். முரளி ஆகியோர் பங்கேற்று பேசினர்.
விழாவில் 200மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

