காலமுறை ஊதியத்தில் ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்.
தமிழ்நாடு பொது நூலக்துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது.
சங்கத்தின் மாநில தலைவர் டி. சண்முகம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சு. குணசேகரன், மாநில பொருளாளர் கு. ராஜகுரு, முன்னாள் மாநில தலைவர் பிரபாகரன், முன்னாள் பொதுச்செயலாளர் சரவணன், மாவட்ட தலைவர் எம். முனி ராஜ், மாவட்ட செயலாளர் சரவணன், பொருளாளர் ஜாகிர் உசேன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்று பேசினர்.
காலியாக உள்ள நூலகர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலமுறை ஊதியத்தில் ஊர்ப்புற நூலகஙகளுக்கு பதவி உயர்வு வழங்கவேண்டும். நூலகங்களை தரம் உயர்த்த வேண்டும். நேரடியாக 3 ஆம் நிலை நூலகர்களை பணி நியமனம் செய்யவேண்டும். நூலகர்களுக்கு பதவி உயர்வு உடனே வழங்கும் வேண்டும்.உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் அனைத்து வகையான நூலகங்களுக்கும் நல்ல காற்றோட்டமான இடவசதி, கழிப்பறை வசதியுடன் புதிய கட்டிடம் கட்டி கொடுக்க வேண்டும். பொதுநூலகத்துறையில் இளையோர் மூத்தோர் ஊதிய முரன்படுகளை களைய வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அண்ணா மறுமலர்ச்சி நூலகம், அறிவுசார்மையைம் ஆகியவற்றை பொதுநூலகத்துறையின் கீழ் கொண்டு வரவேண்டும். வட்டார மற்றும் முழுநேர நூலகங்களுக்கு உரிய பணியிடங்களை தோற்றுவிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

