8- ஆவது ஊதியக் குழுவை உடனே அமைக்க வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு ஆர்ப்பாட்டம்.
புதுடில்லியில் ஆக-10 ல் தேசிய ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நடைபெறும் தர்ணா போராட்டத்திற்கு ஆதரவாக தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

2025 ம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதியன்று பென்சன் விதிகளில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தத்தை வாபஸ்பெறகோரியும் 2025 அக்டோபர் -10 ஆம் தேதியன்று மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய பிரதமர், குடியரசுதலைவர், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு மனு அளிக்கப்பட உள்ளது. இதனை ஆதரித்து இந்தியா முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தேசிய ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பு குழு மாவட்ட தலைவர் டி. பாஸ்கரன் தலைமை வத்தார். ஒருங்கிணைப்பு குழு மாவட்ட செயலாளர் பி. சுப்பிரமணியன், மின் ஊழியர் ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ஆர். சுந்தரமூர்ததி, போக்குவரத்து கழக ஓய்வூதியர் சங்க மாநில இணை செயலாளர் கே. கருப்புசாமி, தமிழ்நாடு அரசு அனைத்து துறைகளிலும் ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் எஸ். பழனிசாமி மாவட்ட செயலாளர் எம். பெருமாள், எல்.ஐ.சி ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ஏ. மாதேஸ்வரன், பிஎஸ்என்எல் அதிகாரிகள் ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ஊமை ஜெயராமன், அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க தலைவர் ஆர். சுப்பிரமணி, தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க மண்டல செயலாளர் ரத்தின வேல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பி. கிருஷ்ணன் வாழ்த்தி பேசினார்.

