தருமபுரியில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் எஸ்.ஏ.டாங்கே பிறந்த நாள் கருத்தரங்கம்
இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை அமைப்பு ரீதியாக துவக்கிய தோழர் எஸ்.ஏ.டாங்கே அவர்களின் 126-வது பிறந்த நாள் கருத்தரங்கம், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி, தருமபுரி மாவட்டக்குழு சார்பில் பிஎஸ்என்எல் அலுவலகம் பின்புறம் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பி.இரவி தலைமை வகித்தார்.மாநில தலைவர் ப.கி.பட்டாபிராமன்,மாவட்ட செயலாளர் ஜெ.பிரதாபன்,மாவட்ட துணை செயலாளர்கள்,ஜி.மாதையன்,சி.பாலன்,மாவட்டபொருளாளர்அலமேலு,
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ்.சுந்தரம் ஆகியோர் சிறப்பித்து பேசினார்கள்.

கூட்டத்தில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள்,அழகேசன்,இலட்சுமணன்,ஜி.பச்சாகவுண்டர்,எஸ்.சி.கிருஷ்ணன்,மாதையன்,செல்வம்,சாக்கன்,இராஜகோபால்,ராஜி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் வைக்கப்பட்ட தோழர் எஸ்.ஏ.டாங்கே அவர்களின் உருவப்படத்திற்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினர். இறுதியில் மாவட்டக்குழு உறுப்பினர் குமார் நன்றி கூறினார்.

