ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர செய்ய வலியுறுத்தி ஏஐடியுசி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கட்டுமான தொழிலாளர்கள்,
போக்குவரத்து தொழிலாளர்கள்,
உள்ளாட்சி,பேரூராட்சி,ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தொழிலாளர் கொள்கையை வெளியிட வலியுறுத்தி ஏஐடியுசி தொழிற்சங்கம் தருமபுரி மாவட்டக்குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் சுதர்சனன் தலைமை வகித்தார்.ஏஐடியூசி தலைவர் எம்.ராஜி,குழந்தைவேலு முன்னிலை வகித்தனர்.இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்லாகக்குழு உறுப்பினர் எஸ்.தேவராசன்,மாவட்ட செயலாளர் எஸ்.கலைச் செல்வம்,ஏஐடியூசி மாநில செயலாளர் ஆர்.ஆறுமுகம்,மாநில துணைத் தலைவர் கே.மணி,
மாநிலக்குழு உறுப்பினர் ஏ.சி.மணி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினார்.
தொழிலாளர்களின் நான்கு சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய சட்டமன்ற கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.1948 ல் கொண்டுவரப்பட்ட சட்டம், முத்தரப்பு குழு முடிவுகளையும் உச்சநீதிமன்றதீர்ப்பைஅமுல்படுத்தவேண்டும்.பத்தாண்டு மற்றும் பதினைந்து ஆண்டு பணிபுரிந்த உள்ளாட்சி, பேரூராட்சி, ஆஷா பணியாளர்கள். பள்ளி தூய்மை பணியாளர்கள் தூய்மை காவலர் ஒஎச்டி ஆபரேட்டர், ஊக்குநர்கள் ,கணிணி ஆபரேட்டர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்சஊதியம் ரூ.26,000 வழங்கவேண்டும். அரசுபோக்குவரத்து கழகப்பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள பணப் பலன்கள் காலதாமமின்றி வழங்க வேண்டும்.ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்.கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய வயது ஆண்களுக்கு 55 பெண்களுக்கு 50 என்ற ஆணையை வழங்க வேண்டும்.அமைப்புச்சார தொழிலாளர்களுக்கு விபத்து நிவாரணம் கட்டுமான தொழிலாளுக்கு வழங்குவதுபோல் வழங்க வேண்டும்.பெட்ரோல், டீசல் கட்டுப்படுத்த வேண்டும். சாலைப் போக்குவரத்து மசோதாவை ரத்துசெய்ய வேண்டும்.ஆட்டோ தனியார் மோட்டர் எப்சி தொகையை குறைக்க வேண்டும்.ஒகேனக்கல் மசாஜ் தொழிலாளிக்கு நலவாரியத்தில் சலுகை வழங்க வேண்டும் .தொழிலாளர் கொள்கையை வெளியிட வேண்டும் .உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்பாட்டத்தில் ஏஐடியூசி மாவட்ட பொருளாளர் ஏ.முருகன்,மாவட்ட துணை செயலாளர் நடராஜன்,துணை தலைவர் மனோகரன்,கலை இலக்கிய பெருமன்றத்தின் முன்னாள் பொது செயலாளர் இரவீந்திரபாரதி,
போக்குவரத்து துறை மண்டல செயலாளர் நாகராசன்,நெசவாளர் சங்க மாவட்ட செயலாளர் சாமிநாதன் ஆஸா மாவட்ட தலைவர் மேனகா,செல்வி நிர்வாகிகள் தமிழ்வாணன்,
முனியம்மாள் மற்றும் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

