நூறு நாள் வேலை பணியாளாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ 5000/ வழங்க கோரி விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
நூறுநாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ஒன்றிய அரசு தீபாவளி போனஸ் ரூ 5,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலக முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்குவிவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எஸ். தேவராசன் தலைமை வகித்தார். ஏஐடியுசி மாநில தணைத்தலைவர்கே. மணி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வட்டார செயலாளர்கள் தருமபுரி வி. பி. சாமிநாதன்,காரிமங்கலம் கிருஷ்ணன்,நிர்வாகிகள்கோபால்,மனோகரன்,எம்.சிவன்,தஙகவேலு,முனுசாமி,ஜெயவேல்,மல்லிகா,அன்னபூர்னி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்பாட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட பணியாளர்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் தீபாவளி போனஸ் ரூ 5,000 வழங்க வேண்டும்.முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்த விவசாய தொழிலாளர் நல வாரியம் lமீண்டும் அமைத்து செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.விவசாயதொழிலாளர்களுக்குவீட்டு மனை பட்டா வழங்கி நிபந்தனையின்றி வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்களைவலியுறுத்திமுழக்கமிட்டனர்.மாவட்டக்குழு உறுப்பினர் பழனி நன்றி கூறினார்.

