ஓட்டு திருட்டை கண்டித்து தருமபுரி மாவட்ட காங்கிரஸ் எஸ்சி பிரிவு கையெழுத்து இயக்கம் துவக்கம
வாக்கு திருட்டை கண்டித்தும் வாக்குதிருட்டுக்கு துணை போகும் தேர்தல் ஆணையத்தை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி துறை சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இந்தியா முழுவதும் வாக்காளர்களின் ஓட்டுக்களை திருடி, ஜனநாயகத்தின் குரல்வலையை நெரித்து, இந்திய தேர்தல் ஆணையத்தை கூட்டணியில் சேர்த்துக் கொண்டு பாசிச பா.ஜ.க கட்சி கொள்ளை புறமாக ஆட்சி செய்து வருகிறது.கடந்த தேர்தலின் போது நடந்த அனைத்து தில்லுமுல்லுகளையும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எம்பி மக்கள் மன்றத்தில் ஆதாரங்களோடு எடுத்து வைத்தார்.

இந்தியா முழுவதும் ஓட்டு திருட்டு செய்யும் பாஜக அரசையும், அதற்கு துணை போன தேர்தல் ஆணையத்தை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ வழிகாட்டுதல்படி, தருமபுரியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு எஸ்சி பிரிவு தருமபுரி மேற்கு மாவட்ட தலைவர் சி. தமிழ்வாணன், கிழக்கு மாவட்ட தலைவர்கே.மாதேஸ்வரன் ஆகியோர் தலைமை வகித்தார்.
மாநில பொதுச்செயலாளர் இராமசுந்திரம் வரவேற்றார்.மாநில தலைவர் ,எம்.பி. ரஞ்சன் குமார் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து சிறப்புரயாற்றினார்.

மாநில பொதுச் செயலாளர் விஜயசேகர் மாநிலதுணைதலைவர் , சேலம் மண்டல பொறுப்பாளர் வழக்கறிஞர் தினகரன் மாநில துணைத்தலைவர் சம்பத்குமார், ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் மோகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் நரேந்திரன் , ஜெய்சங்கர், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் தீபன்குமார், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ராஜ வீரப்பன், தருமபுரி மாவட்ட பொதுச்செயலாளர் குமரவேல், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் வெற்றிவேந்தன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் முபாரக், மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் காளியம்மாள், ஐ .என் .டி .யூ .சி ,மண்டல பொறுப்பாளர் தங்கவேல், முன்னாள் மாணவர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் விக்ரமன்,சட்டமன்ற தொகுதி தலைவர்கள் தருமபுரி யுவராஜ், ஜெய வேல், பாப்பிரெட்டிப்பட்டி விக்னேஸ்வரன், முத்து பாலக்கோடு சங்கீதா, அரூர் தேவராஜ், தருமபுரி வட்டார காங்கிரஸ் தலைவர் மணி, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பங்கேற்றனர். மேற்கு மாவட்ட துணைத்தலைவர் டி. கலை செல்வன் நன்றி கூறினார்.
,

