அடிப்படை வசதிகள் இருக்கா …
அரூர் அரசு மருத்துவமனையில்
மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் ஆய்வு
அரூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், உணவின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இன்று (05.10.2025) ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு, நோயாளிகள் பதிவு செய்யும் இடம், மற்றும் மருந்தகம் உள்ளிட்ட சிகிச்சை பிரிவுகளுக்கு சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நோயாளிகள் பதிவு செய்யும் பிரிவில் உள்ள கணினியில் நோயாளிகள் விவரம் பதிவு செய்வது குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
இதனை தொடர்ந்து, தீவிர சிகிச்சை பிரிவு, அவசர கால பிரிவு, இயல்முறை சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, பொது மருத்துவம், பெண்கள் நலப்பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் ஆய்வு செய்து, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் பற்றி மருத்துவ அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
சிகிச்சை பெற வருபவர்களின் உதவியாளர்கள் காத்திருக்கும் இடத்தினை ஆய்வு செய்து, அவர்கள் அமர்வதற்கான உரிய ஏற்பாடுகளை மருத்துவனையில் ஏற்படுத்தி தர வேண்டும்எனவும்,மருத்துவமனையினையும், வளாகத்தினையும் தூய்மையாக வைத்துகொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்களிடம் அறிவுத்தினார்.

புறநோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் முறைகள், மருத்துவமனைகளை தூய்மையாக பராமரித்தல் குறித்தும் குடிநீர், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை சரியான முறையில் வழங்க மருந்துவர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுரை வழங்கினார்.
மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு, உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். மேலும், நாய் கடி மற்றும் பாம்பு கடிக்கான மருந்துகள் போதிய அளவில் இருப்பு உள்ளதா என்பதை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ்,கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உடனிருந்தனர்.

