மலபார்கோல்டு, டைமண்ட்ஸ் தருமபுரியில் தனது பிரம்மாண்டமான புதிய ஷோரூம் திறப்பு
திறப்பு விழா சலுகையாக அக்டோபர் 10 -2025 வரை ஒவ்வொரு முறை தங்கம் வாங்கும் போதும் வெள்ளி நாணயம் இலவசம்.
தருமபுரி அக்டோபர் 4 அன்று உலகின் சில்லறை நகை விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமாகும். இந்நிறுவனம் இந்தியாவில் பல்வேறு துறைகளில் கால் பதித்து தனது வர்த்தகத்தை விரிவாக்கி கொண்டுள்ள மலபார் குழுமத்தின் முன்னோடி நிறுவனமான மலபார் கோல்டு, டைமண்ட்ஸ் நிறுவனம், தருமபுரியில் பிரம்மாண்டமான ஷோரூமை புதிய இடத்தில் 4 ரோட் அருகில் திறந்துள்ளது.

இந்த ஷோரூமில் அதிகமான இடவசதி புதிய மாடல்கள் மற்றும் டிசைன்களில் தங்கம், வைரம், மற்றும் வெள்ளி நகைகளின் கலெக்சன்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த ஷோரூமை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி திறந்து வைத்தார்.
இந்தநிகழ்ச்சியில்மலபார்கோல்டு,டைமண்ட்ஸ் தமிழ்நாடு மண்டல தலைவர் யாசர், மலபார் கோல்டு, டைமண்ட்ஸ் தமிழ்நாடு மண்டல வணிக தலைவர் சபீர் அலி,
மலபார் கோல்டு மண்டல டைமண்ட்ஸ் தமிழ்நாடு மேற்கு தலைவர் நௌசாத்,
மலபார் கோல்டு ,டைமண்ட்ஸ் தருமபுரி கிளை தலைவர் எம். நாயர்
மற்றும் மலபார் கோல்டு , டைமண்ட்ஸ் மேலாண்மை உறுப்பினர்கள் மற்றும் கிளை ஊழியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

மலபார் கோல்டு டைமண்ட்ஸ் தற்போது 14 நாடுகளில் 410-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை கோவை, மதுரை நாகர்கோயில் திருநெலவேல் திருநெல்வேலி சேலம் ஈரோடு, தஞ்சாவூர், இராமநாதபுரம், தர்மபுரி வேலூர், திருச்சி, கும்பகோணம், திருப்பூர், காரைக்குடி, மயிலாடுதுறை. புதுக்கோட்டை. மார்த்தாண்டம் புதுச்சேரி கரூர், செங்கல்பட்டு, கடலூர், ஒசூர் ஆகிய நகரங்களில் 32 கிளைகளை கொண்டுள்ளது.

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் விற்பனையகத்தில் கலைநயமிக்க அணி கலன்கள் கிடைப்பது சிறப்பம்சமாகும் அணிந்தாலே ஜொலிக்கும் வைர வடிவமைப்புகளை கொண்டுள்ள நகைகளான வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட ‘ஏரா மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான ‘பிரீசியா’ நகைகள். கைவினை கலைஞர்களால் கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான எத்தினிக் நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிமைப்புகளில் உருவான ‘டிவைன் குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ஸ்டார்லெட் ஆகியவை இந்த ஷோரூமில் இடம்பெற்றுள்ளன.

மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் நிறுவனம் பற்றி:
நாட்டில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் வர்த்தக குழுமங்களில் ஒன்றான மலபார் குழும நிறுவனங்களின் பகளின் முன்னணி பிரிவு தான் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் ஆகும். இந்தியா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகளில் சில்லறை விற்பனை பிரிவில் உள்ள இந்த நிறுவனம் HUD சான்று பெற்ற தங்க நகைகளையும் ஐஜிஐ சான்று பெற்ற வைர நகைகளையும் பிஜிஐ சான்று பெற்ற பிளாட்டிண நகைகளையும் ஹால் மார்க் சான்று பெற்ற வெள்ளி நகை களையும் மட்டுமே விற்பனை செய்கிறது.

அனைத்து நகைகளும் வெளிப்படையான விலை, நிகர எடை, கற்களின் எடை, சேதாரம், கற்களுக்கான விலை அதன் நிகர எடை ஆகியவற்றை தெளிவாக குறிப்பிடும் பட்டியலுடன் வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நகையின் தயாரிப்பு குறித்தும் விலையையும் எளிதாக புரிந்து கொண்டு வாங்குவதற்கு திட்டமிடலாம். வாடிக்கையாளர்கள் வாங்கும் அனைத்து நகைகளுக்கும் ஆயுள் முழுவதும் இலவச பராமரிப்பு, அனைத்து நகைகளையும் எப்போது வேண்டுமானலும் திரும்ப பெற்றுக்கொள்ளும். உத்தரவாதம் உள்ளிட்டவற்றை வழங்குகிறது.

இவை தவிர மலபார் கோல்டு மற்றும் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான வணிகத்திற்கு அதன் சமூகப்பொறுப்பு முன் முயற்சிகள் இதர காரணங்கள் ஆகும். தனது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சுகாதாரம், கல்வி வீட்டுவசதி, சுற்றுச்சுழல் பாதுகாப்பு, மற்றும் மகளிரை அதிகார மயமாக்குதல் என சமூக பொறுப்பு திட்டங்களுக்கு செலவு செய்கிறது.

