தருமபுரி மாவட்டம் உதயமான தினத்தை முன்னிட்டு போக்குவரத்து காவல்துறையினர் அதியமான்- அவ்வையார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
தருமபுரி மாவட்டம் உதயமாகி 60 – ஆண்டுகள் நிறைவையெட்டி தருமபுரியில் உள்ள அதியமான் அவ்வையார் சிலைக்கு போக்குவரத்து காவல்துறை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஒன்றுபட்ட சேலம் ஜில்லாவில் இருந்து நிர்வாக வசதிக்காக 1965 – ஆம் ஆண்டு அக்டோபர் 2 – ஆம் தேதி தருமபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம் உருவாக்கப்பட்டு 60 – ஆண்டுகள் நிறைவடைகின்றது.

தருமபுரி மாவட்டம் உருவான தினத்தை முன்னிட்டு தருமபுரி போக்குவரத்து காவல்துறை சார்பில் தருமபுரி நான்குரோட்டில் உள்ள அதியமான் – அவ்வையார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். போக்குவரத்துகாவல்துணை ஆய்வாளர் கோமதி,சிறப்பு காவல்துணை ஆய்வாளர் ரகுநாதன்,ஸ்ரீ மகாலட்சுமி சில்க்ஸ் உரிமையாளர் ஆர்.வெங்கட்டேஷ்பாபு,
சமூகவிழிபுணர்வாளர் வழக்கறிஞர் சுபாஷ், ஜே. சி. ஐ தருமபுரி தலைவர் ரவிக்குமார் ஆகியோர் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர். அதியமான் -அவ்வைக்கு வழங்கியநெல்லிக்கணி நநினைவாக பொதுமக்களுக்கு நெல்லிக்கணி வழங்கப்பட்டது.

