தருமபுரியில் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மரியாதை
அண்ணல் மகாத்மா காந்தி அவர்களின் 157 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தருமபுரியில் உள்ள காந்தி சிலைக்கு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ஜே. பிரதாபன் தலைமைவகித்து, மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பிறந்த தின உரை நிகழ்த்தினார்.
மேலும் நிகழ்சியில் தொழிற் சங்க தலைவர் எஸ் சுந்தரம்,கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜி. மாதையன்,சி பாலன்,பொருளாளர் அலமேலு, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பி. இரவி, ஜி. பச்சாகவுண்டர்,ஜி .ராஜகோபால், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர். பெருமாள்,கே.லட்சுமணன்,ஜி சம்பத், ஆர் ரங்கநாதன்,தி தங்கராஜ்,பி பெருமாள் முருகன்,ஆர் மல்லையன் ஆகியவர்கள் கலந்துக் கொண்டனர்.

பின்னர் மதசார்பின்மையை பாதுகாப்போம்! மநல்லினக்கத்தினை பேனி காப்போம்!தீண்டாமையை ஓழிப்போம்!வகுப்பு வாதத்தை முறியடிப்போம் என்று இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் முழக்கமிட்டனர்!

