தருமபுரியில் பாரதமாதா மக்கள் சிந்தனை குழுவினர் மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
மகாத்மா காந்தியடிகள் அவர்களின் 157 – ஆவது பிறந்தநாள் விழா தருமபுரி பாரதமாதா மக்கள் சிந்தனை குழு சார்பில் அக்- 2 அன்று தருமபுரியில், கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு பாரதமாதா மக்கள் சிந்தனை குழுவின் தலைவர் மா. பிரதீப் குமார் தலைமை வகித்தார்.செயலாளர் வ.செளந்திரபாண்டியன் வரவேற்று பேசினார்.மகாத்மா காந்தியடிகள் சிலைக்கு தொழிலதிபர் சிவா ,மாவட்ட விளையாட்டு அலுவலர் தே.சாந்தி ஆகியோர் தருமபுரி எஸ்.வி.ரோட்டில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பித்தனர்.மேலும் தலைமை ஆசிரியர் பணி ஓய்வு மா.தேசி ,மருத்துவர் பூஜா,இலக்கியச்செல்வி. நித்தியபிரியா ஆகியோரும் மாலை அணிவித்து சிறப்பித்தனர்.

ஜவஹர்லால் நேருசிலைக்கு எழுத்தாளர்.கோவிந்தராஜ், விவசாயி சேகர், தொழிலதிபர் வாசுதேவன் ஆகியோர் மாலை அணிவித்து சிறப்பித்தனர்.மேலும் இந்நிகழச்சியில்தொழிலதிபர் ஏ.ஆர்.சக்திவேல், இராகமாலிகா மணி ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இந்நிகழ்வில் தருமபுரி சந்தைபேட்டையில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவிகள் நம்நாட்டுக்கு விடுதலைபெற்றுதந்த தலைவர்களை பற்றி சிறப்பாக பேசினார். இவ்விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.விழா நிறைவில் இராஜாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

