இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தேசதந்நை காந்தியுடிகளின் 157-வது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தருமபுரி மாவட்டக்குழு சார்பில் எஸ்.வி.ரோடு சந்திப்பில் உள்ள உருவ சிலைக்கு மாவட்ட செயலாளர் எஸ்.கலைச்செல்வம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.பின்னர் ,உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாநிலக்குழு உறுப்பினர் சிற்றரசு, வட்டார செயலாளர்கள் தருமபுரி, சாமிநாதன்,
இண்டூர், மாது,வட்டார துணை செயலாளர் மாதையன்,ஏஐடியூசி மாவட்ட செயலாளர் கே.மணி,அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் நவீன்குமார்,ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட செயலாளர் சுப்ரமணி,நல்லம்பள்ளி விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் புகழேந்தி, சிவன், சின்னராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

