தருமபுரி அருகே ஆயுத பூஜையை முன்னிட்டு சாலைப் பணியாளர்கள், மைல் கல்லுக்கு பூஜை செய்து வழிபாடு
தருமபுரி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் பணியாற்றும் சாலைப் பணியாளர்கள் மைல் கல் மற்றும் சாலைப் பணி செய்ய பயன்படுத்தும் உபகரணங்களுக்கு தமிழ்நாடு சாலைப் பணியாளர் சங்கத்தின் மாநில பொது செயலாளர் கே.பாஸ்கரன் தலைமையில் ஆயுத பூஜை செய்து வழிபட்டனர்.
ஆயுத பூஜையை முன்னிட்டு நாளை (1.10.2025)அரசு விடுமுறை என்பதால் சாலைப் பணியாளர்கள் இன்று(30.9.2025) மைல் கல்லுக்கு ஆயுத பூஜை செய்து வழிபட்டனர்.அதன்படி தருமபுரி -திருப்பத்தூர் நெடுஞ்சாலை எஸ்.கொட்டாவூர் பகுதியில் அமைந்துள்ள மைல் கல்லை தண்ணீரால் சுத்தம் செய்து குங்குமம் பொட்டு வைத்தனர்.சாலைப் பணி செய்ய பயன்படுத்தும் மண் வெட்டி,
கொடுவாள்,தள்ளுவண்டி உள்ளிட்ட உபகரணங்களை சுத்தம் செய்து திறுநீரு,குங்குமம் பொட்டு வைத்து,
மைல் கல்லின் இருபுறமும் வாழை மரம் கட்டி,முன் பகுதியில் வண்ண கோலம் போட்டனர்.பொரி கடலை,பழங்கள் படையல் வைத்தனர்.பின்னர் தேங்காய் உடைத்து கற்பூர தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் நாராயணன்,முனியப்பன்,
முருகன், கார்த்திகேயன் மற்றும் அப்பகுதியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் முனியம்மாள் மற்றும் பொதுமக்கள்கலந்துகொண்டனர்.நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் பொரி ,கடலை, பழங்களை வழங்கினார்கள்.

