கவிஞர் கவிதா மோகன்தாஸ் எழுதிய “வானத்து வாசலிலே” என்ற நூலை முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் வெளியிட்டார்.
தருமபுரியில் மாவட்ட நிர்வாகம் , தகடூர் புத்தகப்பேரவை, பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 7 ஆம் ஆண்டு நடைபெற்று வரும் புத்தகத்திருவிழாவில் வானத்து வாசலிலே நூல் வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம்ஸ நடைபெற்றது.

“வானத்து வாசலிலே” நூல் வெளியீடு
தருமபுரி மதுராபாய் சுந்தர்ராஜ்ராவ் திருமண மண்டபத்தில் புத்தகத் திருவிழா நடைபெற்றுவருகிறது.இவ்விழாவில் மகளிர் அணி மாவட்ட செயலாளர் ,கவிஞர் கவிதா மோகன்தாஸ் எழுதிய வானத்து வாசலிலே என்ற நூலை எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்,பேச்சாளர் கரு.பழனியப்பன் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சிக்கு மகளிர் திட்ட அலுவலர் லலிதா தலைமை வகித்தார். தகடூர் புத்தகப்பேரவை செயலாளர் மரு. செந்தில், வரவேற்றார்.தெய்வத்தால்ஆகாதுஎனினும் என்ற தலைப்பில் கரு. பழனியப்பன், அறிவால் எழுக அறத்தால் வெல்க என்ற தலைப்பில் மனுஷ்யபுத்திரன் பேசினார்.

முன்னாள் அமைச்சர் பழனியப்பன், செந்தில் கல்வி குழும நிர்வாக அலுவலர் ரபீக் , டிஎன்சி கல்விக்குழும துணைத்தலைவர் தீபக்மனிவண்ணன், தொழிலாதிபர் ராமநாதன், ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேசினர்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்குமரன், கவிஞர் நவகவி,எழுத்தாளர் இராவிந்திரபாரதி , கவிஞர் அன்புதீபன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். ஆசிரியர் கோவிந்தசாமி நிகழ்சசியை ஒருங்கிணைத்தார். தகடூர் பொருளாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.


