தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி, பிரிவு மாவட்ட தலைவர்கள் மேற்கு சி. தமிழ்வாணன் கிழக்கு கே. மாதேஸ்வரன் பதவிஏற்பு
தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி, பிரிவு சார்பாக புதிய மாவட்ட தலைவர்கள் கர்ம வீரர் காமராசர் சட்ட மேதை அம்பேத்கர் ஆகியோர் சிலைகளுக்கு மாலை அனுவித்து மரியாதை செலுத்தி தருமபுரியில் பொறுப்பேற்று கொண்டனர்.
தருமபுரி மேற்கு மாவட்ட தலைவராக சி .தமிழ்வாணன், தருமபுரி கிழக்கு மாவட்ட தலைவர் கே .மாதேஸ்வரன் ஆகிய இருவரும் சமீபத்தில் புதிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் தருமபுரியில் உள்ள கர்மவீரர் காமராஜர் மற்றும் சட்டமேதை அம்பேத்கர் ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திபொறுப்பேற்றுக்கொண்டார்.பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி, பிரிவு துணைத் தலைவர் மண்டல பொறுப்பாளருமான வழக்கறிஞர் தினகரன், மாநில பொதுச் செயலாளர் ராமசுந்தரம்,மாநிலச் செயலாளர் முத்துசாமி, தருமபுரி மாவட்ட பொதுச் செயலாளர் குமரவேல், முன்னாள் மாவட்ட மகிலா காங்கிரஸ் தலைவி காளியம்மாள், கடத்தூர் நகர தலைவர் கே. டி .முருகன் ,ராபர்ட் ,மாவட்டதுணைத்தலைவர்கள் கலைச்செல்வன், திருஞான செல்வி தருமபுரி சட்டமன்ற தொகுதிதலைவர் யுவராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் முத்து, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் பொறுப்பாளர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

பின்னர் தருமபுரியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் புதியதாக பொறுப்பெற்றுக்கொண்ட தலைவர்கள் சி. தமிழ்வாணன் , கே. மாதேஸ்வரன், ஆகியோர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி, பிரிவு துணைத் தலைவர் மண்டல பொறுப்பாளருமான வழக்கறிஞர் தினகரன், அவர்களிடம் வாழ்த்து பெற்றனர். கூட்டத்தில், கையெழுத்து இயக்கத்தை சிறப்பாக நடத்துவது குறித்தும் சேலத்தில் நடைபெற உள்ள மண்டல நாட்டில் பெருந்திரளாக பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

