16- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்.
16- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை ரூ.10,000 உயரத்துக!.
தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை ரூ.10,000/-(பத்தாயிரம்) ஆக உயர்த்தி, ஊராட்சி மூலம் ஊதியத்தை வழங்கிட வேண்டும்.
01.06.2009 முதல் அரசாணை எண்.234ன்படி,மக்கள்நலப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தை, தற்போது காலமுறை ஊதியமாக நிர்ணயித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு காலமுறை ஊதியம் ரூ 15000/ வழங்குக!
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களின் பணிக்காலத்தை கருத்தில் கொண்டு சிறப்பு காலமுறை ஊதியம் ரூ.15,000/- வழங்க வேண்டும்.
ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதியத் திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றிய பதிவறை எழுத்தருக்கு பொருந்தும் அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும்.

கணிணி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்
நூறு நாள் வேலை திட்டத்தில் 18 ஆண்டுகளாக பணிபுரியும் கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய அரசாணை எண். 37 வெளியிட்ட பின்னரும் இதுநாள் வரை பணி நிரந்தரம் செய்யவில்லை. எனவே கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
நூறு நாள் வேலைத்திட்டத்தின் கணினி உதவியாளர்களுக்கு வருடாந்தி ஊதிய உயர்வை அமல்படுத்தி என். எச். ஐ. எஸ், ஜி. ஐ. எஸ், பி. எப், ஆகியவை பிடித்தம் செய்ய வேண்டும்.10 ஆண்டுகள் பணிமுடிந்த வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர்களுக்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையிலும், மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையிலும் ஊதியம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்.
சுகாதார ஒருங்கிணைப்பாளர்களை பணிநிரந்தம் செய்!
ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் வட்டார / மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர்களின் பணிக்காலத்தை கருத்தில் கொண்டு வட்டார / மாவட்ட அளவில் பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.
3- ஆண்டுகள் பணி முடித்த தூய்மை பணியாளர்களை சிறப்பு காலமுறை ஊதியத்திலும், 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களை காலமுறை ஊதிய கட்டுக்கும் மாற்றம் செய்து, நகராட்சி நிர்வாகத் துறையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் பெறும் ஊதியத்தை வழங்க வேண்டும்.

தூய்மை காவலர்களுக்கு குடும்ப நலநிதி ரூ 5,000,00,வழங்குக!
கிராம சுகாதார ஊக்குநர்களுக்கு மாதம் ரூ.10,000/- (ரூபாய் பத்தாயிரம்) ஊராட்சி மூலம் ஊதியம் வழங்க வேண்டும் மற்றும் பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும்.தூய்மை காவலர்களுக்கு குடும்ப நலநிதி பிடித்தம் செய்து அவர்கள் இறப்பினை எய்தும் போது ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து இலட்சம்) வழங்க வேண்டும்.
மக்கள் நலப்பணியாளர்களுக்கு கடந்த 19.08.2014ம் தேதியன்று மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பினை நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஊராட்சி செயலாளர்களுக்கு தேர்வுநிலை / சிறப்பு நிலை /தேக்கநிலை ஊதியம் வழங்க வேண்டும்.
ஊராட்சியில் பணிபுரியும் கணிணி உதவியாளர்களுக்கு ரூ 20,000 / ஊதியம் வழங்குக!
கிராம ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் கணினி உதவியாளர்களுக்கு மாதம் ரூ.20.000/- ஊதியம் வழங்கி பணிப்பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்.மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.5000/- பணிக்கொடை ரூ.1,00,000/- (ரூபாய் ஒரு இலட்சம்) வழங்க வேண்டும்.கிராம ஊராட்சியில் பணிபுரிந்து வரும் ஊராட்சி செயலாளர்கள், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், சுகாதார ஊக்குநர்கள் ஆகியோருக்கு கிராம ஊராட்சி ஊதியக் கணக்கில் ஊதியம் வழங்கி அதனை பிரதி மாதம் கடைசி வேலை நாளில் பெறும் வகையில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கிராம ஊராட்சி செயலர் கையொப்பமிட வழிவகை செய்திட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எம். சரவணன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் கேமகேஷ்வரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் எஸ். திருவருட் செல்வன், மாவட்ட செயலாளர் கே. முருகன், மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன், ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.நிர்வாகிகள் துரை வேல், இலட்சுமணன், அருள்மணி, மூர்த்தி, முத்து, குணசேகரன், கோவிந்தசாமி, முருகன், மோகன், இராமதாஸ், பவுன் ராஜ், கோவிந்தசாமி, ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

