ஒன்றிய அரசு தமிழகத்திற்கு கல்வி நிதியை வழங்க கோரி செப்-26 ல் தருமபுரியில் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டக்குழு கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது.
மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பி இரவி தலைமை வகித்தார். இதில் கட்சியின் மாநில தலைவர் ப. கி. பட்டாபிராமன் இன்றைய அரசியல் நிலை குறித்து பேசினார். முன்னதாக அஞ்சலி தீர்மானத்தினை மாவட்ட துணைச் செயலாளர் ஜி .மாதையன் அவர்கள் வாசித்தார்,நடைபெற்ற வேலை அறிக்கை மற்றும் எதிர்கால கடமைகள் குறித்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெ .பிரதாபன் பேசினார் கூட்டத்தில் கட்சியின் மாவட்ட பொருளாளர் அலமேலு, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் இலட்சுமணன்,வி .செல்வம்,வெ .பை.மாதையன்,ஜி.ராஜகோபால்,எல் .சி ,கிருஷ்ணன்,எஸ் .சாக்கன் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே. இலட்சுமணன்,கலையரசி,காளியம்மாள்,ராஜாமணி,அழகேசன்,குமார்,பெருமாள்,அர்ச்சுணன்,ரங்கநாதன்,முனண்னு தங்கராஜி மற்றும் பலர் கலந்துக் கொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபபட்டன.

வாக்கு திருடை கண்டித்தும், உதயமான திட்டத்தில் விலகி மின் கட்டணத்தின் குறைக்க,கல்வித்துறைக்கு ரூ 2152 கோடியை ஒன்றிய அரசு உடனே விடுவிக்க வேண்டி வருகின்ற 26-09-2025 அன்று தருமபுரி மாவட்ட தலைமை தபால் அலுவலகம் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் கிராமப்புற ஊராட்சிகள்,வட்டார ஊராட்சி,மாவட்ட ஊராட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்து எட்டு மாதங்கள் கடந்தும் உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருப்பதினால்குடிநீர்,தெருவிளக்கு,சாலைவசதி,தூய்மைப்பணி ஆகியவைகள் சரியாக நடைபெறவில்லை . இதனை கேட்க்க உள்ளாட்சி பிரதிநிகள் இல்லை. அதனால் தருமபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உள்ளாட்சி தேர்தல் நடத்தும் தேர்தல் ஆணையம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் வருவதில்லை .குடிநீர் வழங்க வேண்டும்,மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் கீழ் வேலை அட்டை பெற்ற அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்,100 நாள் பணி முடித்த பணிதள பொறுப்பாளர்களை மாற்ற வேண்டும்,முறையாக சட்டபடி சமூக தணிக்கை செய்ய வேண்டும்

