தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ்சி/ எஸ்.டி துறை தருமபுரி மேற்கு மாவட்ட தலைவராக சி. தமிழ்வாணன் நியமனம்
தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டிஎஸ்சி/ எஸ்.டி துறை தருமபுரி மேற்கு மாவட்ட தலைவராக நல்லம்பள்ளியைச் சேர்ந்த சி.தமிழ்வாணன் அவர்களை அகில இந்திய பொறுப்பாளர் ராஜு ஐஏஎஸ் , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு .செல்வ பெருந்தகை எம்எல்ஏ, அகில இந்திய ஏஸ்சி துறையின் தலைவர் ராஜேந்திரபால்கௌதம் எம்எல்ஏ, ஆகியோரின் ஒப்புதலோடு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி துறையின் மாநில தலைவர் எம். பி .ரஞ்சன் குமார் அவர்கள் தருமபுரி மேற்கு மாவட்ட எஸ்.சி துறையின் தலைவராக தமிழ்வாணன் அவர்களை நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே மாணவர் காங்கிரஸ் ,இளைஞர் காங்கிரஸ், ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர், சேவா தளம் சட்டமன்ற தொகுதி தலைவர், தருமபுரி மாவட்ட எஸ்சி/எஸ்டி பிரிவு மாவட்ட செயலாளர் ஆகிய பொறுப்புகளில் கட்சிப் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

