தருமபுரி மாவட்டத்தில் உள்ள நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தருமபுரி மாவட்ட பேரவைக் கூட்டம் தருமபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் சி பாலன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம் குமார், சி சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பேரவைக் கூட்டத்தினை இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் ப. கி. பட்டாபிராமன் துவக்கி வைத்து பேசினார்,மாநில செயலாளர் எம். சுந்தர்ராஜன் தேசிய சர்வதேசிய மாநில அரசியல் குறித்து விமான முறையில் சிறப்புரையாற்றினார்,
பேரவைக் கூட்டத்தினை வாழ்த்தி கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் எம். எஸ் .ராமசாமிரெட்டி, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ். சுந்தரம், பி இரவி,விவசாயிகள் சங்க தலைவர் எஸ். மாதன்,ஜெ பிரதாபன்,ஜி மாதையன், ஜி பச்சாகவுண்டர்,எல் .சி. கிருஷ்ணன்,என் பி ராஜி,வி செல்வம்,எ அலமேலு,கே லட்சுமணன்,வெ பை. மாதையன்,ஜி சம்பத்,எம் முண்னு,ஆர். மல்லையன்,கே ராஜமாணிக்கம், இலட்சுமணன்,ஆர். பெருமாள்,பி பெரியண்ணன்,எம் .முனியப்பன், ஆகியோர் கலந்துக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

தருமபுரி மாவட்டத்தில் அறிவித்த நீர்பாசன திட்டங்களை உடனே நிறைவேற்ற வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நீர்பாசன திட்டங்களான அல்லியாளம்-தூர் சட்டி ஏரிவரை தெண்பெண்னையாற்றி உபரிநீர் திட்டம்,ஈஞ்சம்பாக்கம் நீர்தேக்கம் திட்டங்களை போர்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும்,
காவிரியில் வெள்ளக்கெடுத்து ஓடும் காலங்களில் உபரியாக ஒவ்வொரு ஆண்டும் 200 டி எம் சி க்கு மேல் கடலில் கலக்கிறது இதில் 2 டி எம் சி, உபரி நீரை மற்றும் தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் பொதுப் பணித்துறை ஏரி,உள்ளாட்சித்துறை ஏரியில் திருப்பினால் ஆண்டு முழுவதும் வேளாண்மை பணி நடைபெறும் எனவே காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற வேண்டும்.
தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் கிராமப்புற சாலைகள்,மாவட்ட சாலை,நெடுஞ்சாலை ஆகியவைகள் கடுமையான போக்குவரத்து காரணங்களால் புதுப்பிக்கப்படும் இருக்கின்றது இதனை உடனே புதிய தார்சாலையாக்க வேண்டும், ஒன்றியத்தின் ஆட்சி செய்துக் கொண்டு இருக்கும் பாஜக வின் வாக்கு திருடி கண்டித்தும்,தமிழ் நாடு அரசு உதய மின் திட்டத்தில் இணைந்ததால் மின் கட்டணம் உயர்ந்து வருகிறது அதனால் ஒன்றிய அரசின் திட்டத்தில் இருந்து வெளியேறி வேண்டும் அதனால் மின் கட்டணம் உயராமல் இருக்கும் மேலும் பாஜக வின் கொள்கைகளை கண்டித்து இம்மாத கடைசி வாரத்தில் ஒன்றிய அரசு அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது,

இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாவட்டக்கு தேர்வு:-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்களாக 37 பேரும் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்களாக பி இரவி,சி பாலன்,எஸ் சாக்கன்,இலட்சுமணன்,ஜெ பிரதாபன்,ஜி மாதையன்,ஜி பச்சாகவுண்டர்,ஜி ராஜகோபால்,எல் சி கிருஷ்ணன்,என் பி ராஜி,வெ பை மாதையன்,வி செல்வம் ஆகிய 13 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட செயலாளர் தேர்வு :
தருமபுரிமாவட்டசெயலாளராக ஜெ.பிரதாபன்,மாவட்டதுணைச்செயலாளர்களாக சி .பாலன் ஜி.மாதையன்,மாவட்ட பொருளாளராக எ. அலமேலு ஆகியவர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.இறுதியில்,ஜி. ராஜகோபாலு நன்றி உரையாற்றினார்

