தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க தருமபுரி மாவட்ட செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் தருமபுரி மாவட்ட செயற்குழு கூட்டம் தருமபுரி சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்ட தலைவர் முத்துலட்சுமி சேகர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கே. பச்சியப்பன், மாவட்ட பொருளாளர் கே.கிருஷ்ணன், தருமபுரி ஒன்றிய செயலாளர் டி. திருஞானம், பொருளாளர் மஞ்சுளா,பாலக்கோடு ஒன்றிய செயலாளர் திம்மன், பொருளாளர் நாகராஜ், துணைத்தலைவர் மாதேஸ், நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் எம். மாதம்மாள், துணை செயலாளர் முருளி, பொருளாளர் அபிமண்ணன், பென்னாகரம் ஒன்றிய செயலாளர் முனியம்மாள் பொருளாளர் எம். கரூரான், ஆகியோர் பங்கேற்று பேசினர்.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தற்கு மாவட்டம் முழுவதும் புதிய உறுப்பினர் சேர்ப்பது, என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

