மிட்டாரெட்டிஅள்ளி- பொம்மிடி இணைப்பு சாலை திட்டத்தை நிறைவேற்ற கோரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
மிட்டாரெட்டிஅள்ளி முதல் பொம்மிடி வரை இணைப்புச் சாலைத்திட்டத்தை உடனே நிறைவேற்றக் கோரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம் மிட்டாரெட்டிஅள்ளி கோம்பேரி முதல் காளிக்கரம்பு வரை உள்ள 1500 மீட்டர் தூரம் ஏற்கெனவே வெள்ளைக்காரன் ஆண்ட காலத்தில் இருந்து வண்டிப் பாதையாக மக்கள் சென்று வந்துள்ளார்னர்.
மிட்டாரெட்டிஅள்ளி கோம்பேரி மலைப்பகுதிக்கு 2023 மார்ச் 31,தேதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர்,இரா.முத்தரசன் நேரில் ஆய்வு செய்தார். இந்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுமாறு மத்திய,மாநில அரசுகளைக் கேட்டுக்கொண்டார்.அதனடிப்படையில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்பு இக்கோரிக்கையை நிறைவேற்றவில்லை. எனவே மிட்டாரெட்டிஅள்ளி முதல் பொம்மிடி வரை உள்ள இணைப்புச் சாலைத் திட்டத்தை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தருமபுரி மாவட்ட செயலாளர் எஸ். கலைச்செல்வம் தலைமை வகித்தார்.
மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ். சின்னசாமி, எம். மாதேஸ்வரன், எஸ். கமலாமூர்த்தி , ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் கே. மணி, அனைத்திந்திய இளைஞர்பெருமன்ற மாவட்ட செயலாளர் எம். நவீன் குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி ஒன்றிய செயலாளர் வி. பி. சாமிநாதன், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார செயலாளர் மணி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

