குரூப் – 4 தேர்வு எழுதும் மையத்தை ,தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் எஸ். கே. பிரபாகர்,நேரில் பார்வையிட்டு ஆய்வு
சென்னையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடைபெறும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – குரூப் தேர்வினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் எஸ். கே. பிரபாகர்,நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குரூப் -4 தேர்வுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 4,922 தேர்வுக் கூடங்களில் எழுதுகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வை 13 லட்சத்து 89 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.
தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உட்பட3ஆயிரத்து935காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது.தேர்வுக்கு விண்ணப்பித்த 13 லட்சத்து 89 ஆயிரம் பேருக்கு ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் இன்று குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தேர்வாணையம் மேற்கொண்டுள்ளது. இத்தேர்வினை 13,89,738 விண்ணப்பதாரர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 4,922 தேர்வுக்கூடங்களில்எழுதுகின்றனர். ஜூலை – 12 இன்று சென்னை, எழும்பூர், கெங்குரெட்டி தெரு, பிரசிடென்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மையத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடைபெறும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – குரூப் -4 தேர்வினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் எஸ். கே. பிரபாகர், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

