பேருந்து வசதி இல்லாமல் அவதிப்படும் பன்னாகனஅள்ளி கிராம மக்கள்
நல்லம்பள்ளி வட்டத்திற்குபட்ட பன்னாகனஅள்ளி கிராமத்திற்கு பேருந்து வசதி கேட்டு மாவட்ட நிர்வாகத்தையும் தமிழக அரசையும் அக்கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தருமபுரி மாவட்டம்,நல்லம்பள்ளி வட்டம்,எச்சனஅள்ளி பஞ்சாயத்திற்குட்பட்டது பன்னாகனஅள்ளி கிராமம்.இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர் பெரும்பான்மையான மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.இங்குள்ள மக்கள் பல்வேறு வேலை மற்றும் தொழில் செய்ய பென்னாகரம்,தருமபுரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகிறனர்.பள்ளி,கல்லூரி மாணவர்களும் அதிகம் பேர் உள்ளனர்.
இந்நிலையில் விவசாய விளை பொருட்களை சந்தை படுத்தவும்,கூலி தொழிலாளர்கள், வெளியூர்களுக்கு வேலைக்கு செல்லவும் பள்ளி கல்லூரி மாணவர்கள்,
பேருந்துகளுக்கு சென்ற வர சுமார் 3 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று வர வேண்டிய நிலை உள்ளது.திடிரென உடல்நிலை பாதிப்பு ஏற்படும் நோயாளிகள் மருத்துவமனை செல்வதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்த கிராம மக்கள் பேருந்து வசதி கிடைக்காமல் உள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.பேருந்து வசதி கேட்டுஅதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே பன்னாகனஅள்ளி
கிராம மக்களின் நலன் கருதி காலை,மதியம்,மாலை என மூன்று முறை கிராமம் வழியே பேருந்து வந்து,செல்லும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இக்கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்தியுள்ளனர்.

