பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம். கடத்தூரில் கை நீட்டிய சர்வேயர் கைது
கடத்தூர் அருகே பட்டா மாற்றம் செய்ய பத்து ஆயிரம் லஞ்சம் பெற்ற சர்வேயரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கடத்தூர் அடுத்த மணியம்பாடி, ஆலமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசுந்தரம் இவரது மகன் இளையராஜா, 33. விவசாயி.இவர் தனது தந்தை பெயரில் உள்ள, ஐந்தரை ஏக்கர் விவசாய நிலத்தை கடந்த மாதம், 17 ல் கடத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் தனது பெயரில், 3.83 சென்ட் நிலமும்,சகோதரி ஜெயப்பிரியா பெயரில், ஒரு ஏக்கர் நிலமும், மற்றொரு சகோதரிக்கு 16 சென்ட் நிலமும், மீதமுள்ள நிலத்தை பொதுவாகவும், பாகப்பிரிவினை செய்து கிரையம் செய்து உள்ளார். இதற்கு தனி பட்டா வேண்டி இணையதளம் மூலமாக இளையராஜா பாப்பிரெட்டிப்பட்டி நில அளவைத் துறைக்கு பதிவு செய்துள்ளார். அதன் நகலை மணியம்பாடி வருவாய் கிராம சர்வேயர் விஜயகுமாரை, (28) சந்தித்து அதன் நகலை கொடுத்துள்ளார்.இதற்கு தனிப்பட்ட ஏற்பாடு செய்ய, 12,000 ரூபாய் லஞ்சமாக தரவேண்டும் என விஜயகுமார் கேட்டு உள்ளார். இளையராஜா 10,000 ரூபாய் கொடுப்பதாக கூறியுள்ளார். இதை யடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத இளையராஜா, தருமபுரி லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்தார்.புகாரின் படி டி.எஸ்.பி., நாகராஜன் மேற்பார்வையில்,காவல் ஆய்வாளர் பெருமாள் வழக்கு பதிவு செய்து, ரசாயனம் தடவிய ரூபாயை இளையராஜாவிடம் கொடுத்து அனுப்பினர்.அவர் ஜூலை -11 அன்று காலை மணியம்பாடி அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகே சர்வேயர் விஜயகுமாரிடம், பணத்தை கொடுக்கும்போது அப்பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விஜயகுமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.இச்சம்பவம் கடத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

