130 கோடி பேரை ரயில் பயணத்திலிருந்து வெளியேற்றியது தான் பாஜகவின் சாதனை. சு.வெங்கட்டேசன் எம்பி
குறைவான இரயில் கட்டண உயர்வு என்ற கண்துடைப்பு என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கட்டேசன் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த ஏழு ஆண்டுகளில் 130 கோடி பயணிகள் குறைந்துள்ளனர். ஆனால் வருமானம் இரட்டிப்பாகியுள்ளது.
காரணம், தட்கல், பிரீமியம் தட்கல், டைனமிக் கட்டணம் ஆகியவற்றுக்கு 30 சதமானம் படுக்கை வசதிகள் ஒதுக்கப்படுகின்றன. 500 ரூபாய் டிக்கெட் 3000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஒரு கி மீ க்கு ஒரு பைசா உயர்வு என்பதல்ல.130 கோடி பேரை ரயில் பயணத்திலிருந்து வெளியேற்றியது தான் பாஜகவின் சாதனை. என தனது எக்ஸ்தள பக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கட்டேசன் குறிப்பிட்டுள்ளார்.

