தருமபுரி தோட்டக்கலைத்துறையின் சார்பில் 18,258 பயனாளிகளுக்கு ரூ. 521.29 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் தகவல் மாவட்ட ஆட்சியர் சதீஸ் தகவல்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம் திட்டத்தினைத் துவக்கி வைத்தார். தருமபுரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம் திட்டத்தின் கீழ் ரூ.450 மானிய விலையில், 1313 எண்ணிகையிலான மாடித்தோட்டத்தளைகள் வழங்கப்பட்டுள்ளன. ஊரகப் பகுதிகளில் ரூ.30.00 மானிய விலையில் 5,200 எண்ணிக்கையிலான காய்கறி விதைத்தளைகள்வழங்கப்பட்டுள்ளன. ரூ.75 மானிய விலையில் 4,500 எண்ணிக்கையிலான ஊட்டச்சத்து தளைகள் 61601 மொத்தம் 4,500 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.227.69 இலட்சம் மதிப்பீட்டில் 16,700 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் நடமாடும் வாகன விற்பனை நிலையங்கள் வாயிலாக குடியிருப்புகளின் அருகிலேயே தடையின்றிக் கிடைத்திட உத்தரவிட்டார்.
தருமபுரி மாவட்டத்தில் ரூ.15,000 மானிய விலையில் 190 நடமாடும் பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை வண்டிகள் ரூ.28.5 நிதி செலவில் விநியோகிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ். 190 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். தருமபுரி குடியிருக்கும் பகுதிகளின் அருகிலேயே வாகனங்கள் மூலம் மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு பொதுமக்கள் பயனடைந்துள்ளனர் என மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

