வெள்ளக்காடானது ஒகேனக்கல்.காவிரி ஆற்றில் 65000 கன அடி தண்ணீர்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்து வந்த நிலையில், நீர்வரத்து மீண்டும் படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 65 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது.
கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால், இரு அணைகளில் இருந்தும் அதிகளவிலான உபரி நீர் வெளியேற்றப்பட்டன. அணைகளுக்கு நீர்வரத்து குறைந்த நிலையில், அணையின் பாதுகாப்பு கருவி வெளியேற்றப்பட்ட உபரி நீரும் கடந்த நான்கு நாட்களாக குறைக்கப்பட்டன.

தற்போது இரு அணைகளும் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் மீண்டும் அதிகரித்து வெளியேற்றப்பட்டு வருகின்றன. இதனால் தமிழக எல்லை பகுதியான பிலிகுண்டுலுவில் நேற்று காலை வினாடிக்கு 43 ஆயிரம் கன அடியாக குறைந்த நீர்வரத்து மீண்டும் படிப்படியாக அதிகரித்து தற்போது வினாடிக்கு 65 ஆயிரம் உள்ளன அடியாக உயர்ந்துள்ளது. மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை தமிழகத்திற்கு வரும் உபரி நீர் குறித்து அளவிடு செய்து வருகின்றனர்.

மேலும் கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து வருவதால் அணைகளில்இருந்தும்வெளியேற்றப்படும்உபரிநீர்அதிகரித்துவெளியேற்றப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

