பாலக்கோடு ரூ. 30 இலட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தொடங்கி வைத்தார்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியில் உள்ள 12 வது வார்டில் உள்ள சானார் தெருவில் 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்குசுற்றுசூழல் அணி நகர அமைப்பாளர் சரவணன், நகர அவைத் தலைவர் அமானுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட 12வது வார்டு சானார் தெரு, சாவடி தெரு, முருகன் கோயில் தெரு, பள்ளிகூடத்தான் தெரு, ஞாண பிள்ளையார் கோயில் தெரு ஆகிய தெருக்களுக்கு பேவர் பிளாக் சாலை அமைக்க 15 வது நிதிக்குழு மானியம் மூலம் 30 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதனை தொடர்ந்து பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் வகாப், ரூஹித், சாதிக், மோகன்,ஒன்றிய பிரதிநிதிகள் பெரியசாமி, அன்வர், இளைஞர் அணி அமைப்பாளர்கள் மன்சூர், பழனிசாமி, தொண்டர் அணி அமைப்பாளர் குமரன், கிளை செயலாளர்கள் கணேசன், ராஜீ, நிர்வாகிகள் சக்திவேல், சிவா, துரை, சுரேஷ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

