பாலக்கோடு பேருராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் 9 சுத்தகரிப்பு நிலையம் அமைக்க தீர்மானம்
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டம் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்திற்கு செயல் அலுவலர் இந்துமதி, துணைத் தலைவர் தாஹசீனாஇதயாத்துல்லா முன்னிலை வகித்தனர்.தலைமை எழுத்தர் பத்மா வரவு செலவு கணக்குகள் சமர்ப்பித்தார்.
இதையடுத்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாலக்கோடு பேரூராட்சியில் செயல்பட்டு வரும் அண்ணா துவக்கப்பள்ளி, நூற்றாண்டு துவக்கப்பள்ளி, அக்ரஹகாரம் துவக்கப்பள்ளி, கல்கூடப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, உருது துவக்கப்பள்ளி ஆகிய 5 பள்ளிகளுக்கும், 1,6,12, 16 ஆகிய 4 வார்டுகள் என மொத்தம் 9 பகுதிகளில் சுத்தகரிப்பு நிலையம் அமைத்தல், கல்கூடப்பபட்டியில் உள்ள அங்கன்வாடி மையம் சமையல் கூடமையத்தை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகளை நிறைவேற்றி பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு கொண்டு வர
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் மோகன், சாதிக்பாஷா, சரவணன், ரூஹித், விமலன், குருமணி, ஜெயந்தி மோகன், லட்சமிராஜசேகர், பிரியாகுமார், தீபா, ஆயிஷா, சிவசங்கரி, நாகலட்சுமி, மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

