போதை பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையேபோதைப்பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்துதலுக்கு எதிரானவிழிப்புணர்வினைஏற்படுத்தும்பொருட்டும் ”போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு”வை உருவாக்கிட Drug Free TN – Selfie Stand நிகழ்ச்சி
மாவட்டஆட்சியர்ரெ.சதீஸ்தலைமையில் இன்று நடைபெற்றது.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் ஆகியவற்றுக்கு எதிரான சர்வதேச போதைப் பொருட்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையேபோதைப்பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்துதலுக்கு எதிரான விழிப்புணர்வினை ஏற்படுத்தும்பொருட்டும் ”போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு”வை உருவாக்கிட Drug Free TN – Selfie Stand நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் தலைமையில்இன்று (27.06.2025) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், போதைப்பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் Drug Free TN – Selfie Stand –ல் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.
மேலும்,தருமபுரிஅரசுகலைக்கல்லூரியைச்சேர்ந்தசுமார்100க்கும்மேற்பட்ட
மாணவ,மாணவியர்கள் Drug Free TN – SelfieStandல்புகைப்படம்எடுத்துக்கொண்டு, போதைப்பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் (ஆயம்) நர்மதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.லோகநாதன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

