ஒகேனக்கல்லில் நீர்வரத்து 65,000 கன அடியாக அதிகரிப்பு:குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 65,000 கன அடியாக அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும் மற்றும் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று (27.06.25) காலை 9 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு 65,000 கன அடியாக அதிகரித்துள்ளது இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 57,000 கன அடியாக தண்ணீர் வரத்து இருந்தது. கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பால் இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மறு உத்தரவு வரும் வரை குளிக்கவும் மற்றும் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எவரும் ஒகேனக்கல் காவிரி கரை ஒரம் செல்ல வேண்டாம். மேலும் அனைத்து துறை அலுவலர்களும் மற்றும் அனைத்து அரசு இயந்திரங்களும் தயார் நிலையில் வைத்து கொள்ள வேண்டும்.என தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், தெரிவித்துள்ளார்.

