மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பணி பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற கோரி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு தர்ணா போராட்டம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > பணி பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற கோரி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு தர்ணா போராட்டம்
மாவட்டங்கள்

பணி பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற கோரி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு தர்ணா போராட்டம்

Social Vision
Last updated: 2025/06/25 at 3:36 PM
Social Vision
Share
2 Min Read
SHARE

பணி பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற கோரி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு தர்ணா போராட்டம்

7- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் தருமபுரியில் தர்ணா மற்றும் பேரணி நடத்தினர்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் நில அளவைத்துறையில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலர்களுக்கும் உரிய பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்கள் தாக்கப்படும் பட்சத்தில், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க சிறப்பு பணிப்பாதுகாப்பு சட்டம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

இதையும் படிங்க

பென்னாகரம் பருவதன அள்ளியில் சிட்கோ அமைக்கும் பணியை விரைந்து முடிக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.
10,517 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு
தருமபுரி பிப்-12 அகில இந்தியவேலை நிறுத்தத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் முழுமையாக பங்கேற்க முடிவு 

பொதுமக்களுக்கு சிறந்த சேவையாற்ற, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் விரைந்து நிரப்ப வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்களுக்கு, குறிப்பாக களப்பணியாளர்களுக்கு, அதிகப்படியான பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் போதிய கால அவகாசமின்றி இலக்குகள் நிர்ணயிக்கப்படுவதை தடுத்து, இதற்கான விரைவான தீர்வை வழங்க வேண்டும்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் நில அளவைத்துறையில் உள்ள அனைத்து நிலை அலுவலர்களின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு, மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும்.

பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கான கருணை அடிப்படை பணி நியமன உச்சவரம்பை 5 சதவீதத்திலிருந்து மீண்டும் 25 சதவீதமாக உயர்த்தி, கிராம உதவியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கல்வித்தகுதிக்கேற்ப உரிய பணியிடங்களை வழங்க வேண்டும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் வெளிமுகமை தற்காலிக மற்றும் தொகுப்பூதிய நியமனங்களை முழுமையாககைவிட்டு, அனைத்து பணியிடங்களையும் நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதியை ‘வருவாய்த்துறை தினமாக’ அனுசரித்து அரசாணை வெளியிட வேண்டும். மேலும், வருவாய்த்துறை அலுவலர்களின் தன்னலமற்ற சேவையை அங்கீகரிக்கும் வகையில் மாநில அளவில் அரசு விழாக்கள் நடத்த வேண்டும். உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி அரசு கல்லூரி முன்பு துவங்கிய பேரணி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி. துரைவேல் தலைமை வகித்தார். வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் வெ. தனப்பால் வரவேற்றார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கு. அகிலன் அமிர்தராஜ், கே. வெங்கட்டேசன், ஆர். ரங்கன், ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம். சுருளி நாதன்,மாவட்ட செயலாளர் ஏ. தெய்வானை,தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ச. இளங்குமரன், தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் மாநில தணைத்தலைவர் ஆர். வெங்கட்டேசன், வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் முன்னாள் மாநில தணைத்தலைவர் டியூக் பொன்ராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டமைப்பின் மாநில பிரச்சார செயலாளர் கதிரவன், நில அளவை அலுவலர் ஒன்றிப்பின் மாநில செயலாளர் கல்பனா ஆகியோர் வாழ்த்தி பேசினார்.

TAGGED: பணி பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற கோரி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு  தர்ணா போராட்டம்
Social Vision June 25, 2025 June 25, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தொல்லியல்

ஒன்றுபட்ட சேலம் மாவட்டத்தின் வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள், புத்தகங்கள் , நன்கொடையாக வழங்கலாம்.

July 18, 2024
குற்றம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மனைவி ,2 குழந்தைகள்  இறந்து அழுகிய நிலையில் சடலமாக  மீட்பு 

May 31, 2024
தூய்மை பணியாளர்கள்
அரசு நல திட்டம்

தூய்மை பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.74,250/- மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள்

March 8, 2024
ஆரோக்கியம்

காரிமங்கலத்தில், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் மற்றும்  அபராதம்.

September 3, 2024
தமிழ்நாடு

தருமபுரி பழைய பேருந்து நிலைய வியபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வியபாரிகள் வலியுறுத்தல். 

February 7, 2026
மாவட்டங்கள்

புதிய சட்டங்களை கைவிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெருமுனை கூட்டம் 

July 14, 2024

மேலும் படிங்க

மாவட்டங்கள்

பென்னாகரம் பருவதன அள்ளியில் சிட்கோ அமைக்கும் பணியை விரைந்து முடிக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.

February 7, 2026
மாவட்டங்கள்

10,517 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு

February 6, 2026
மாவட்டங்கள்

தருமபுரி பிப்-12 அகில இந்தியவேலை நிறுத்தத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் முழுமையாக பங்கேற்க முடிவு 

February 5, 2026
மாவட்டங்கள்

தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய நிலம் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

February 5, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?