ஒகேனக்கல் சுற்றுலா தளத்தை தூய்மையாக பராமரிக்க ஆட்சியர் ரெ. சதீஷ் அறிவுறுத்தல்
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் சுற்றுலா மையத்தை மாவட்ட ஆட் சியர் ரெ.சதீஸ், ஆய்வு மேற்கொண்டு, தொங்கு பாலம், பரிசல் நிறுத்துமிடம், பரிசல் சென்றடையும் பகுதி, மசாஜ் பகுதி, உடைமாற்றும் அறை, நுழைவு சீட்டு வழங்கும் இடம், உணவு சமைக்கும் இடம், பொதுமக்கள் காத்திருப்புப் இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு, தூய்மையாகவும், பிளாஸ்டிக் இல்லாத வண்ணமாகவும் வைத்து கொள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

இந்த ஆய்வின்போது, பென்னாகரம் வட்டாட்சியர் பிரசன்னா மூர்த்தி, பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன், மாவட்ட சுற்றுலா அலுவலர் (பொறுப்பு) பா.கதிரேசன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

