ஏறுமுகத்தில் தக்காளி விலை விவசாயிகள் மகிழ்ச்சி
தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு பகுதியில் புகழ்பெற்ற தக்காளி சந்தை செயல்பட்டு வருகிறது.பாலக்கோடு சந்தைக்கு பாலக்கோடு ,மாரண்டஅள்ளி காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த தக்காளிகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.
பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பொழிவு காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது.
தக்காளி சந்தையில் நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விலை கடந்த சில நாட்களாக கிலோ 18 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையும் 15 கிலோ கொண்ட கூடை 300 ரூபாய் வரைஉயர்ந்து. விற்பனையாகிறது.
கடந்த ஆறு மாதங்களாக கிலோ தக்காளி 10ரூபாய்க்கும் குறைவாக விற்பனையான நிலையில் தற்போது இந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மேலும் பாலக்கோடு தக்காளி சந்தையில் இருந்து தேனி திண்டுக்கல் ஈரோடு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் தக்காளிகளை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்து வருகின்றனர். விலை உயர்வு வரத்து குறைவு காரணமாக ஏராளமான மொத்த வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
தக்காளி விலை உயர்வால் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

