ஒகேனக்கல்லில் நீர்வரத்து 5000 கன அடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 5000 கன அடியாக அதிகரித்துள்ளது – மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
தமிழக காவிரி கரையோர பகுதிகளில் ஆங்காங்கே பெய்யும் மழையின் காரணமாக நீர்வரத்து தற்போது அதிகரித்து வினாடிக்கு 5000 கன அடியாக நீடித்து வருகிறது. இந்த நீர்வரத்தால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சினி ஃபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி செல்கின்றன.
மேலும் காவிரி கரையோர பகுதிகளில் ஆங்காங்கே விட்டுவிட்டு மழை பெய்து வருவதன் காரணமாக மேலும் இந்த நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

