புத்தர் பிறந்த நாள் புத்த பூர்ணிமா (2569) பெருவிழா,தமிழ்நாடு பௌத்த அறநெறியாளர் சங்கம் வாழ்தது
புத்த பூர்ணிமா விழா வெகுச் சிறப்பாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.புத்த பூர்ணிமா என்பது வெறும் கொண்டாட்டத்தோடு நின்றுவிடாமல், அவரது போதனைகளை உலகம் முழுவதும் கொண்டுச் செல்லும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது. புத்தர் எடுத்துச் சொன்ன மொழிகள் அனைத்தையும் அன்றைய நாளில் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் தினமாகவும் உள்ளது .
சித்தார்த்த கௌதமர் கபிலவஸ்துவில் அரச குடும்பத்தில் பிறந்து இளவரசருக்குரிய அனைத்து கலைகளையும் கற்று தன் நாட்டு சமூகப் பணியை சாக்கிய சங்கத்தில் இக்காலகட்டத்தில் ரோகினி நதிநீர் பகிர்வில் பிரச்சனை ஏற்பட்டு கோலியர்களுக்கும் சாக்கியர்களுக்கும் இடையே போராக மாறும் சூழல் உருவானது. மனித உயிர்கள் போரில் பலியாவதை சித்தார்த்தர் விரும்பவில்லை. போரை தவிர்க்க சாக்கிய சங்கத்தில் வாதித்து முயன்றும் முடியாமல் போய்விட்டது. சங்க பெரும்பான்மை முடிவின்படி சித்தார்த்த கௌதமர் துறவறம் மேற்கொண்டார்.
மக்கள் பிரச்சினைகளுக்கு காரண காரியங்களை ஆராய்ந்தார். மக்களிடையே முரண்பாடுகளும் துன்பங்களும் ஏழ்மையும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அவைகளை தவிர்த்து மக்கள் மகிழ்ச்சியோடு வாழ நல்வழி காண வேண்டும் என சித்தார்த்தர் துறவறத்தில் முடிவு செய்தார்.
உறுதியான மனநிலையில் அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு புத்தர் என்கிற உயர்நிலையை அடைந்தார். மக்களுக்கு துன்பம் இருக்கிறது, துன்பத்திற்கு காரணம் இருக்கிறது. துன்பத்தை நீக்க முடியும் என தனது மெய்ஞானத்தின் மூலம் அறிந்து தம்ம அறநெறியை வகுத்தளித்தார்.

அவரது தம்ம வழிமுறைகளை மக்களிடையே போதித்தார். ஒவ்வொரு மனிதருக்கும் தனிமனித மேம்பாடு, குடும்ப மேம்பாடு, சமுக மேம்பாடு அவசியம் என்பதை உனர்ந்து மக்கள் மகிழ்வோடு வாழ. தூய்மை பாதை, நேர்மை பாதை, நல்லொழுக்க பாதை ஆகியவற்றை ஏற்று தம்மத்தை அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வழிகாட்டினார். தம்மத்தை பரப்ப, அறநெறி வாழ்வியலை பௌத்த பண்பாடாக மாற்றிட சங்கம் அமைத்து மக்களுக்கு போதனை செய்தார்.
புத்தர் வாழ்ந்த காலத்தை தொடர்ந்து. தமிழ்நாட்டில் சங்க காலத்தில் பௌத்த அறநெறி தழைத்தோங்கியது. கிபி.7ஆம் நூற்றாண்டு வரை தமிழர்கள் பௌத்த அறநெறியை தங்கள் 3 வாழ்வியல் கோட்பாடாக ஏற்று வாழ்ந்தனர்.
காஞ்சி பல்லவ இளவரசர் போதிதர்மர் பௌத்த துறவியாகி சீனா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் முழுவதும் பௌத்தத்தை பரப்பினார். பௌத்தம் போதித்த அன்பையும் அறத்தையும் அடிப்படையாகக் கொண்ட சங்க கால தமிழ் இலக்கியங்கள் 5 இன்றும் தமிழர்களின் நீதி நூல்களாக திகழ்கின்றன. அறம் பொருள் இன்பத்தை போதித்த திருக்குறள் உலகப் பொதுமறையாக போற்றப்படுகிறது.

அயோத்திதாச பண்டிதர், போதி சத்துவர் அம்பேத்கர் ஆகிய பௌத்த முன்னோடிகள் இந்தியாவில் 1200 ஆண்டுகளுக்கு பிறகு பௌத்த சங்கங்கள் அமைத்து பௌத்தத்தை மீட்டு உருவாக்கம் செய்தனர்.

நமது பௌத்த முன்னோடிகள் காட்டிய பௌத்த பாதையில் பயனித்து மக்கள் அனைத்து துன்பங்களிலிருந்து விடுதலை பெறச் செய்து சமத்துவத்தை நிறுவுவதே தமிழ்நாடு பௌத்த அறநெறியாளர் சங்கத்தின் நோக்கமாகும். பேராசான் புத்தர் பிறந்தது. ஞானம் எய்தியது. பரிநிப்பானம் அடைந்தது அனைத்துமே விசாக பௌர்ணமி நாளாகும். இத்திருநாளை உலகம் முழுவதும் கொண்டாடி மகிழ்கின்றனர். அந்தவகையில் தமிழக மக்களின் நல்வாழ்விற்காக தமிழ்நாடு பௌத்த அறநெறியாளர் சங்கம் புத்தபூர்ணிமா பெருவிழாவை முன்னெடுக்கிறது. இவ்விழாவில் அந்தந்த பகுதி மக்கள் அந்தந்த பகுதியில் நடைபெறும் புத்தபூர்ணிமா விழாவில் கலந்து கொண்டு அறிவொளி பெற்று மனநலம். உடல்நலம். செல்வவளம், மனிதநேயம், மக்கள் பலம், உலக அமைதி ஆகிய பௌத்த தன்மைகளை உணர்ந்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். என தமிழ்நாடு பௌத்த அறநெறியாளர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் அமரவேல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

