அரூரில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 135 ஆம் ஆண்டு பிறந்த முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவிப்பு
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 135 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பாரதிதாசனின் சிலைக்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் அ. தமிழ்ச்செல்வன் தலைமையில் மாலை அணிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன், திமுக மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் சா. ராஜேந்திரன், கவிஞர் கண்ணிமை, பகுத்தறிவாளர் கழக மாநில கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி, மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணி தலைவர் மணிமேகலை, மகளிர் பாசறை தலைவர் கல்பனா, ஆசிரியர் அசோகன், கவிஞர் குறிஞ்சி சீதாராமன், ஆசிரியர் சின்னக் கண்ணன், முன்னிலையில் பேரூராட்சி துணைத் தலைவர் சூரிய தனபால், திமுக நகரக் கழக செயலாளர் முல்லை இரவி ஆகியோர் பாரதிதாசனின் சிலைக்கு மாலை அணிவித்தனர், மாலை அணிவிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் நூல்களை திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை. ஜெயராமன் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் திமுக சார்பில் விண்ணரசு, பாடகர் மணி, கவுன்சிலர் உமா, முருகன், திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் வடிவேலன், ஒன்றிய தலைவர் குமரேசன், ஒன்றிய செயலாளர் பச்சையப்பன், மாணவர் அணி பிரதாப், கவிஞர் நொச்சி பூந்தளிரன், கவிஞர் பிரேம் குமார், ராம்கி உட்பட பலர் கலந்து கொண்டனர், வருகை தந்த அனைவருக்கும் சூரிய தனபால் முல்லை ரவி ஆகியோர் இனிப்பு வழங்கினர்.

