வக்ஃப் வாரிய திருத்த சட்டத்தை ஒன்றிய அரசு வாபஸ் பெற வலியுறுத்தி பிரச்சாரம்
மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தருமபுரிமாவட்டம் நல்லம்பள்ளியில் உள்ள மஸ்ஜித் யூசுப் பள்ளிவாசலில் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃப் திருத்தச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு துண்டறிக்கைகளை மாவட்டச் செயலாளர் எம்.இம்ரான் தலைமையில் வழங்கப்பட்டன.
வக்ஃப் மசோதாவை நிறைவேற்றிய ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். வக்ஃப் திருத்த சட்டத்தை ஒன்றிய அரசு திரும்பபெற வேண்டும் என வலியுறுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் அபீஸ், குதரத், பயாஸ், உமர்,மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

