தருமபுரியில் ஏஐசிசிடியு சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா
சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135 – ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஏஐசிசிடியு சார்பில் தருமபுரி அரசு மருத்துவமனை முன்பு உள்ள அம்பேத்கார் திருவுருவச் சிலைக்கு மாலைஅணிவிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அம்பேத்கர் அவர்களின் உருவச்சிலை க்கு மாவட்ட செயலாளர் சி. முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர்அவர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஏஐசிசிடியு தமிழ்நாடு மின்வாரிய ஜனநாயக பொது தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் விசுவநாதன், நிர்வாகிகள் ராகுல் டிராவிட், இளைய செல்வன், தாஸ், ஏஐசிசிடியு தமிழ்நாடு மருத்துவமனை கல்லூரி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ரவிக்குமார், மணிவண்ணன், முனி ராஜ் ,வசந்த் குமார் , ஏஐசிசிடியு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகி பழனி ஆகியோர் பங்கேற்றனர்.

