தருமபுரி மாவட்டத்தை சார்ந்த 2 பட்டுநூற்பாளர்களுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ரொக்கப்பரிசு வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் சென்னை தலைமைச் செயலகத்தில், பட்டு வளர்ச்சி துறையின் சார்பில் 2024-25 ஆம் ஆண்டு மாநில அளவில் சிறந்து விளங்கும் பலமுனை பட்டுநூற்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில், மாநில அளவில் சிறந்து விளங்கும் பட்டுநூற்பாளர்களுக்கு ரொக்கப்பரிசுகள் கடந்த 25.03.2025 அன்று வழங்கப்பட்டது.
இதில் தருமபுரி மாவட்டத்தை சார்ந்த க.பிரகாஷ் த/பெ கமலேசன், மதிகோண்பாளையம், தருமபுரி மாவட்டம் பட்டுநூற்பாளருக்கு முதல் பரிசு ரூ. 1,00,000/- மற்றும் வேதவள்ளி க/பெ ஜெயன், ராஜகோபால்கவுண்டர் தெரு, தருமபுரி மாவட்டம் பட்டுநூற்பாளருக்கு இரண்டாம் பரிசு ரூ.75,000/-ரொக்கப்பரிசு காசோலையாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் , கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை அரசு செயலாளர் வே.அமுதவள்ளி, பட்டு வளர்ச்சித்துறை இயக்குநர் கி.சாந்தி மற்றும் பட்டு வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

