இருசக்கர வாகன தலைக்கவச விழிப்புணர்வு பேரணி
தருமபுரி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் காவல்துறையின் சார்பில் ”சாலை பாதுகாப்பு-உயிர் பாதுகாப்பு” மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் இருசக்கர வாகன தலைக்கவச விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், கொடியசைத்து, துவக்கி வைத்தார்.
இந்த இருசக்கர வாகன தலைக்கவச விழிப்புணர்வு பேரணியில் காவல்துறையினர், இருச்சக்கர வாகன விற்பனையக பணியாளர்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இப்பேரணி தருமபுரி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் தொடங்கி, சேலம்-தருமபுரி பிரதான சாலை வழியாக தருமபுரி நகராட்சி, நான்கு ரோடு பகுதி வரை சென்றடைந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசங்களை மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், வழங்கினார். மேலும், ”சாலை பாதுகாப்பு-உயிர் பாதுகாப்பு” குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சி.க.ஜெயதேவ்ராஜ், உதவி ஆணையர் (கலால்) நர்மதா, போக்குவரத்து ஆய்வாளர் தரணீதரன், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

