தருமபுரி மாவட்டத்தில் 10.3 சராசரி மழை அளவு
தமிழகத்தில் விடியற்காலையில் குளிர்காற்றும் பகல் நேரங்களில் கடுமையான வெப்பம் வீசுகிறது. இந்நிலையில் வரும் 3 நாட்களுக்கு மழைபெய்யக்கூடும் என வாணி நிலை மையம் அறிவிறித்திருந்தது. தருமபுரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது.
தருமபுரி மாவட்டத்தில் மார்ச் 11 அன்று நிலவரப்படி பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-
தருமபுரி – 1 மில்லிமீட்டர்
மாரண்ட அள்ளி – 8 மில்லிமீட்டர்
ஒகேனக்கல் – 3 மில்லிமீட்டர்
அரூர் – 29 மில்லமீட்டர்.
பாப்பிரெட்டிப்பட்டி – 18 மில்லிமீட்டர் பென்னாகரம் -1 மில்லிமீட்டர் மழை பெய்தது பாலக்கோடு 17 மில்லிமீட்டர் ,நல்லம்பள்ளியில் 8.5 மில்லிமீட்டர் மொரப்பூர் -7 மில்லிமீட்டர் ,
என மழைபெய்துள்ளது.
மாவட்டத்தில் மொத்தமழை அளவு – 92.5 மில்லிமீட்டர்,மாவட்டத்தின் மொத்த சாரசரி மழையளவு – 10.3 மில்லிமீட்டர் ஆகும் . அதிக அளவு மழை பொழிவு அரூரிலும்,குறைந்த அளவு மழை பதிவு பென்னாகரத்திலும் பதிவாகியுள்ளது.

