பாலக்கோட்டில் திமுக பொதுக் கூட்டம் – தொண்டர்களுக்கு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி அழைப்பு
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையத்தில் புதன்கிழமை நாளை மாலை 5 மணிக்கு ஒன்றிய அரசின் தொகுதி மறுசீரமைப்பிற்க்கு எதிரான கண்டன பொதுக் கூட்டம் பேரூராட்சி தலைவர், பேரூர் கழக செயலாளர் பி.கே.முரளி அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது.
நிகழ்ச்சிக்கு மத்திய ஒன்றி கழக செயலாளர் முனியப்பன் முன்னிலை வகிக்கிறார்.தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் உயர்கல்வி துறை அமைச்சர் முனைவர் பி.பழனியப்பன் கண்டன உரையாற்றுகிறார்.
இதில் தலைமை கழக பேச்சாளர்கள் குடியாத்தம் புவியரசி, குமரிபிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு “தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்” என்ற தலைப்பில், ஒன்றிய அரசின் தொகுதி மறுசீரமைப்பிற்க்கு எதிர்ப்பு தெரிவித்தும் , புதிய கல்வி கொள்கையை ஏற்காததால் தமிழகத்திற்க்கு தர வேண்டிய நிதியை தர மறுக்கும் ஒன்றியை அரசை கண்டித்தும் . விளக்க உரையாற்ற உள்ளனர்.
அதுசமயம் மாவட்ட, ஒன்றிய, பேரூர் கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், கழக முன்னோடிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு பேரூராட்சி தலைவர், பேரூர் கழக செயலாளர் பி.கே.முரளி அவர்கள் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

