இசைஞானி அவர்களைச் சந்திக்கும் போதெல்லாம் வியப்பு மேலிடுகிறது: தொல்.திருமாவளவன் எம்பி
அவர் மானுட வாழ்வை எவ்வளவு தத்துவார்த்தமாக புரிந்திருக்கிறார் என்பதை நமக்குப் புரியவைக்கிறார்.இசை எனக்குத் தொழில் அல்ல; இசை என்னிலிருந்து வேறு அல்ல; இசையாகவே நான் வாழ்கிறேன்” – என அவர் விளம்புகிறபோது அவரின் விழிகளிலிருந்து வீசும் ஞானஒளியை உணரமுடிகிறது.அது-தான் என்கிற அகந்தையின் வெளிப்பாடு அல்ல; தன்னை உணர்ந்துள்ள மெய்ஞானத்தின் புலப்பாடு!அவர் இசைஞானி என்பதைவிட மெய்ஞானி என்பதே பொருந்தும். என தனது எக்ஸ் பக்கத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின்தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.


