பொம்மிடியில் ரயில் பயணிகள் நலச் சங்க கூட்டம்.
பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நல சங்க சிறப்பு கூட்டம் பொம்மிடியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தலைவர் அசாம்கான் தலைமை வகித்தார். இதில் சங்கம் பதிவு செய்தல் மற்றும் பொம்மிடியில் கூடுதல் ரயில் நிறுத்தங்களுக்கான அடுத்தகட்ட முயற்சிகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றை குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் செயலாளர் ஜெபசிங் சங்கத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ள பணிகள் குறித்து விளக்கி கூறினார். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தென்னக ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தி தொடர்பாளர் முனிரத்தினம் செய்திருந்தார். இந்நிகழ்வில் பொருளாளர் கார்த்திகேயன் துணைத் தலைவர்கள் வெல்டிங் சிவகுமார், சங்கீதா , துணைச் செயலாளர் சுரேஷ் , மொரப்பூர் பயணிகள் சங்க நிர்வாகி ரகுநாதன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சண்முகம், செந்தில், கங்கை அமரன், ராவ், வணிக சங்க செயலாளர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

