முள்ளங்கி விலை சரிவால் விவசாயிகள் கவலை
தருமபுரி மாவட்டத்தில் முள்ளங்கி விலை சரிவு காரணமாக, விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில், தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பலர் முள்ளங்கி பயிர் சாகுபடி செய்கின்றனர். விதையை நடவு செய்து, ஒன்றரை மாதத்தில் முள்ளங்கியை அறுவடை செய்ய முடியும். எனவே, குறுகிய காலத்தில் வருமானம் கொடுக்கும் பயிர் என்பதால், முள்ளங்கி சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக தர்மபுரி மாவட்ட உழவர் சந்தைகளில் ஒரு கிலோ முள்ளங்கி, 4 முதல், 5 ரூபாய் வரை விற்பனையானது. இதனால், முள்ளங்கி விவசாயிகள் வேதனையடைந்தனர். ஒரே சமயத்தில், அதிக பரப்பில் முள்ளங்கி சாகுபடி நடந்ததாலும், சந்தைக்கு முள்ளங்கி வரத்து அதிகரித்தது, விலை சரிவடைந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தார்.

