5330 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறும் வகையில் தொப்பையாறு அனையில் தண்ணீர் திறப்பு
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய நிலங்களின் பாசனத்திற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி முன்னிலையில் தண்ணீர் திறந்து வைத்தார்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம்,தொப்பையாறுநீர்த்தேக்கத்திலிருந்து தருமபுரி மாவட்ட ஆயக்கட்டு பகுதிகள் 2050 ஏக்கர் நிலமும், சேலம் மாவட்ட ஆயக்கட்டு பகுதிகள் 3280 ஏக்கர் நிலமும் ஆக மொத்தம் 5330 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் 2025 மார்ச்-3 முதல் 2025 மே 11 வரை 70 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கிராமம், கம்மம்பட்டி கிராமம் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள செக்காரப்பட்டி கிராமம், வெள்ளார் கிராமம், தெத்திகிரிப்பட்டி கிராமம், மல்லிகுந்தம் கிராமம் என மொத்தம் 6 கிராமங்களில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
விவசாயத்திற்கு பொதுமக்கள் நீரினை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும் என்றும், நீர் பங்கீட்டு பணிகளில்நீர்வளஆதாரத்துறையினருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.மேலும், விவசாய பொதுமக்கள் நீர்வளத்துறையினருடன் ஒத்துழைத்து நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக விளைச்சல்பெறும்நோக்குடன்செயல்படவேண்டுமேனகேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம்.பெ.சுப்பிரமணி, பி.தர்மசெல்வன் செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் கணேஷ், உதவி பொறியாளர் மோகனப்பிரியா உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

